×

ஏரியில் விழுந்து காவலாளி சாவு

கிருஷ்ணகிரி, ஏப்.24:  கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது (55). இவர், சீகலஹள்ளி ஏரியின் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏரிக்கு காவலுக்கு வழக்கம் போல் சென்றுள்ளார். அப்போது அவர் அதிகளவில் மது அருந்தியுள்ளார். மது போதையில் தவறி ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். மறுநாள் காலை அங்கு வந்த கிராம மக்கள்,  மாது இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். நாகரசம்பட்டி போலீசார் மாதுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : death ,guards ,lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு