×

பொன்பரப்பி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.24:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்ரை அருகே, பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதி மோதல் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி  மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளப்பாடியை சேர்ந்தவர்  சின்னகண்ணு(56). இவர் தள்ளப்பாடி அம்பேத்கர் சிலை அருகே செல்லும்போது,  அவருடைய நண்பர் சிவா என்பவர் வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை அவரிடம்  காட்டினார். இதுகுறித்து சின்னகண்ணு சிங்காரப்பேட்டை போலீசில் புகார்  செய்தார். அதில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதி  மோதலை வைத்து, சாதி கலவரத்தை தூண்டும் வகையில், சிங்காரப்பேட்டை பகுதியில்  வாட்ஸ் அப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கூறியிருந்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன்  விசாரணை நடத்தி, ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டன்(24),  விமல்ராஜ்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு