தர்மபுரி, ஏப்.23: தர்மபுரி அருகே மூக்கனூர் மலையில் பிடித்த காட்டுத்தீ கோடைமழையால் கட்டுக்குள் வந்தது. தர்மபுரி அருகே மூக்கனூர் மலை, முத்தம்பட்டி வனப்பகுதி, கோட்டப்பட்டி வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் காட்டுத்தீ சமீபத்தில் பிடித்தது. இதில் முத்தம்பட்டி மற்றும் கோட்டப்பட்டி வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தினர். ஆனால் மூக்கனூர் மலைப்பகுதியில் மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். மலைச்சரிவு பகுதியில் ஏறி அணைக்க போதிய பாதை வசதி இல்லாததால், தீயை எளிதில் கட்டுப்படுத்த வனத்துறையால் முடியவில்லை. இதனால் தீ பிடித்து கொண்டே இருந்தது.