பாலியல் தொழில் புரோக்கர் கைது

வேளச்சேரி: வேளச்சேரி, டான்சி நகர், 21வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.  பாலியல் தொழில் நடத்திய ஆந்திர மாநிலம், பங்காருபேட் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். பெண் ஒருவரை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: