சேலம், ஏப்.21: அயோத்தியாப்பட்டணம் ராமர்

கோயிலில் கோதண்ட ராமசுவாமிக்கும், ஸ்ரீசீதா லட்சுமிக்கும்  தங்க கவசத்தில் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக விழா இன்று(ஞாயிறு) காலை 10 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி, கோமாதா பூஜை, மூலவருக்கு அபிஷேகம் போன்றவை நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு  மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் சீர்வரிசை அழைப்பு நடக்கிறது. இதையொட்டி திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதனை கோட்டை பெருமாள் கோயல் சுதர்சன பட்டாச்சாரியார் நடத்தி வைக்கிறார். பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Related Stories: