திருச்செங்கோடு, ஏப்.18: மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா சிட்டிங் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் திருச்செங்கோட்டில் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா சிட்டிங் வாலிபால் போட்டிகள், மலேசியா கோலாலம்பூரில் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க, இந்தியா சார்பில் 12 வீரர்களும், 12 வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு, முதன்முறையாக பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரி வளாக உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.