தி.பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் சித்திரை திருவிழா வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா

திருத்துறைப்பூண்டி, ஏப். 16: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் புகழ்பெற்ற பிறவிமருந்தீசர் கோயில் (பெரிய கோயில்) சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் இரவு பிறவி மருந்தீசர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் உபயதாரர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணியளவில் நடைபெறவுள்ளது.

Related Stories: