ஓசூர், ஏப்.14: ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யா தீவிர பிசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர், ஓசூர் நகர பகுதி மற்றும் பாகலூர் பகுதியில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் விளக்கி கூறி வாக்கு சேகரித்தார். திமுக கூட்டணியை வெற்றிபெற செய்யும்பட்சத்தில் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட விலையை கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டு வரப்படும். வாடிக்கையாளர்களின் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டண தொகை முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும். 10ம் வகுப்பு வரை படித்த ஓரு கோடி பேர் சாலை பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர் என தெரிவித்து பிரசாரம் செய்தார்.