நெய்வேலி, ஏப். 11: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இ-சேவை மையமானது வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு சொசைட்டிகளில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ், வாரிசு, விதவை, கலப்பு திருமணம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் விண்ணப்ப கட்டணமாக அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் 60 மட்டுமே சரியாக வசூல் செய்கிறார்கள். ஆனால் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள தனியார் கணினி மையங்களில் உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளில் உள்ளவர்கள் இ- சேவை மையம் என கூறிக்கொண்டு அங்கு வரும் அப்பாவி பொதுமக்களிடம் கூடுதல் பணம் வசூல் செய்கின்றனர்.