சிவகாசி, ஏப். 10: சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், சிவகாசி ஒன்றியத்தில் உள்ள ஆண்டியாபுரம், அனுப்பன்குளம், மயிலாடுத்துறை, பேராபட்டி, இந்திராகலனி, இராமலிங்காபுரம், சுந்தரராஜபுரம் உள்ளிட்ட 25 கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு நேற்று வாக்கு
சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘அனுப்பன்குளம் பள்ளி தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான் வெற்றி பெற்று நன்றி தெரிவிக்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜியுடன் வரும்போது, பள்ளியை தரம் உயர்த்தியதற்கான அரசு ஆணையை முதல்வரிடம் பெற்று வருவேன். சாத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் முழுமைப்படுத்தப்பட்டு ஆய்வு நிலையில் உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் ஆய்வை முடித்து, சிவகாசி ஒன்றியப்பகுதியில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்.