பெரும்புதூர், ஏப். 9: பெரும்புதூர் அருகே முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், கேமரா காட்சியில் பதிவான மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.வேலூர் அடுத்த ஆற்காடு தாலுகா ஊனைபள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (70). பெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் பகுதியில் அமைந்துள்ள டைல்ஸ் கடையில், தங்கி காவலாளியாக வேலை செய்து வந்தார்.இந்நிலையில் கோவிந்தசாமி, புதுப்பேர் - அமரம்பேடு சாலையில் உள்ள கால்வாயில் நேற்று இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வந்து சடலத்தை கைப்பற்றி பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.