புழல் சிறை கைதி சாவு

புழல்: சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியை சேர்ந்தவர் மதி (எ) மதியழகன் (52). அடிதடி உள்ளிட்ட வழக்கில் பேசின்பிரிட்ஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 21ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்றைய தினம் மதியழகனுக்கு திடீரென கை, கால் நடுக்கம் ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, மேலும் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மதியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: