தர்மபுரி, ஏப்.3: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக ேவட்பாளர் டாக்டர் செந்தில்குமார், பாப்பாரப்பட்டி பகுதியில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் டாக்டர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, பென்னாகரம் வட்டத்தில், ஏ.பாப்பாரப்பட்டி, தொட்லாம்பட்டி, பிக்கிலி, கொல்லப்பட்டி, பெரியூர், பூதிநத்தம், அம்மன் நகர், புதுக்கரம்பு, தண்டுகாரனஅள்ளி, கூக்குட்ட மருதஅள்ளி, திருமல்வாடி, கிட்டம்பட்டி, எட்டியாம்பட்டி, பள்ளிப்பட்டி, கருப்பன அள்ளி, மாங்கரை, மோட்டுப்பட்டி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரித்தார்.