நாகர்கோவில், ஏப்.3 : மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குமரி மாவட்டத்தில் இன்று பிரசாரம் செய்கிறார். தோவாளை, வடசேரி, திங்கள்சந்தையில் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக இன்று (3ம்தேதி) அவர் குமரி மாவட்டம் வருகிறார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் பிரசாரம் செய்கிறார். இரவு 7.30க்கு தோவாளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கும், அவர் வடசேரி, திங்கள்சந்தை ஆகிய இடங்களில் திறந்த வேனில் இருந்தவாறு பேசுகிறார். இரவு கன்னியாகுமரியில் தங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை (4ம்தேதி) காலை காரில் நெல்லை புறப்பட்டு செல்கிறார். இன்று மதியம் தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், அங்கிருந்து கூடங்குளம் வழியாக காவல்கிணறு வந்து பின்னர் நான்கு வழிச்சாலை வழியாக தோவாளை வந்தடைகிறார்.