கிருஷ்ணகிரி, மார்ச் 28: கிருஷ்ணகிரி அடுத்த சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஜப்பானிய ஓரிகாமி, கிரிகாமி கலை பயிற்சி அளிக்கப்பட்டது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஜப்பானிய கலைகளான ஓரிகாமி, கிரிகாமி கலைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை கும்பகோணத்தை சேர்ந்த ஓரிகாமி கலைஞர் தியாகசேகர் கற்பித்தார். அப்போது கத்திரிக்கோல், பசை இல்லாம் காகிதங்களை வெறும் மடிப்பில் மூலம் கொக்கு, மயில், குயில், வாத்து முதலான பறவைகளின் உருவங்கள், சிங்கம், புலி, குரங்கு போன்ற விலங்குகளை செய்து காண்பித்தார். இந்த கலைகளை மாணவர்கள் உற்சாகத்துடன் கற்று, அவர்கள் செய்த கலை பொருட்களை கண்காட்சியாக காட்சிப்படுத்தினர். தொடர்ந்து கத்திரிக்கோலை பயன்படுத்தி உருவங்களை செய்வது குறித்த பயிற்சியான கிரிகாமி கலையையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.