கிருஷ்ணகிரி, மார்ச் 27: போச்சம்பள்ளி அருகே தாதம்பட்டியை சேர்ந்த செவிலியர் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரு கே தாதம்ப ட்டி அப்பாவு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 6 வயதில் மகள் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தர்மபுரிக்கு காரை வாடகைக்கு ஓட்டிச்சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தமிழரசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. செவிலியரான அவர், தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவனையில் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதுகுறித்து செவிலியரின் உறவினர்களுக்கும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற செவிலியர் வீடு திரும்பவில்லை.இதையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட உறவினர்களுக்கு அப்போது, அவர்களுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் செவிலியர் பேசியுள்ளார். அவர், தன்னை கடத்திச்சென்று ஒரு இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், எந்த இடம் என்பதை அவரும் குறிப்பிடவில்லை.