பல்லாவரம்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை விழுப்புரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்தை தமிழ்மணி (44) என்ற டிரைவர் இயக்கினார். தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் திருநீர்மலை அருகே பஸ் வந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் அரசுப் பஸ் வேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி நொருங்கியது. பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட டிரைவர் தமிழ்மணி படுகாயமடைந்தார்.