காங்., முன்னாள் எம்எல்ஏவிடம் ஆதரவு கோரிய திமுக வேட்பாளர்

ஓசூர், மார்ச் 22:  ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் நகர பொறுப்பாளர் சத்யா போட்டியிடுகிறார். இவர், கூட்டணி கட்சியினரான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமுமுக, கொமதேக, ஐஜேகே உள்ளிட்டோரை சந்தித்து முதற்கட்டமாக ஆதரவு திரட்டி வருகிறார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில், ஓசூர் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் இல்லத்திற்கு சென்று, அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, சால்வை அணிவித்து ஆதரவு கேட்டார். இந்த சந்திப்பின்போது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜா, இளைஞரணி துணை அமைப்பாளர் வேணு, நகர மாணவரணி ரத்தன்சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: