தாம்பரம்: தாம்பரத்தில் பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்று சென்றனர். தாம்பரம், கடப்பேரி மௌலானா நகர் பச்சை மலைச்சாரல் பகுதியில் சக்தி வேல்முருகன் கோயில் உள்ளது. சுமார் 40 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில், 41வது ஆண்டு பங்குனி உத்திர திருத்தேர் விழா கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முதல் நாள் அன்றே சக்திவேல் முருகனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.