காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

புழல்: சென்னை மாநகராட்சி 23வது வார்டு புழல்-அம்பத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் காஞ்சனா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட காசநோய் துணை இயக்குநர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் மாவட்ட நல கல்வியாளர் காசநோய் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் காசநோய் அறிகுறிகள் குறித்தும், அவற்றை தடுப்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. காச நோய் இல்லாத தமிழகம் 2025ம் ஆண்டு படைத்திட மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: