கழுத்து அறுத்து வாலிபர் தற்கொலைக்கு முயற்சி

சென்னை: தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு கடையில்  செருப்புகள் காணாமல் போனது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டிச்சேரியை சேர்ந்த சரவணன் (36), வேளச்சேரியை சேர்ந்த செந்தில்குமார் (49) ஆகியோரை பிடித்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் செருப்புகளை பறிமுதல் செய்ய மாம்பலம் போலீசார் பாண்டிச்சேரியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றபோது கத்தியால் சரவணன் கழுத்தை அறுத்துக் கொண்டார். அவருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: