பல்லாங்குழியான சாலையை சீரமைக்ககோரி பாவூர்சத்திரத்தில் இன்று மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

நெல்லை, மார்ச் 8: முறையான பராமரிப்பின்றி சேதமடைந்த பாவூர்சத்திரம் இசக்கியம்மன் கோயில் வழியாக ஆவுடையானூர் செல்லும் சாலையை துரிதமாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க வலியுறுத்தி பாவூர்சத்திரத்தில் இன்று (8ம் தேதி) மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட் அருகே இசக்கி அம்மன் கோயில் திடலில் இன்று (8ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை வகிக்கிறார். மதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் ஜேசு ஜெகன், இந்திய கம்யூனிஸ்ட்  ஒன்றியச் செயலாளர் தங்கம், தென்காசி வட்டாரச் செயலாளர் அருணாசலம், கல்லூரணி ஊராட்சி திமுக செயலாளர் சீனித்துரை முன்னிலை வகிக்கின்றனர்.

கீழப்பாவூர் ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபாலன் வரவேற்கிறார். இதில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் செல்லப்பா, மதிமுக ஒன்றியச் செயலாளர் ராம உதயசூரியன், காங்கிரஸ் மாநில பேச்சாளர் எஸ்ஆர் பால்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கோரிக்கையை விளக்கிப் பேசுகின்றனர். ஆவுடையானூர் ஊராட்சி திமுக செயலாளர் நாகராஜ் நன்றி கூறுகிறார்.

Related Stories: