செங்கல்பட்டு, மார்ச் 7: மாசி மாத அமாவாசையையொட்டி செங்கல்பட்டு அடுத்த ஆத்தூரில் இருந்து அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு, பாலாற்றங்கரை வரை வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தங்கள் உடலில் அலகு குத்தி கார், லாரி, ஆட்டோக்களை இழுத்து சென்றனர். அதேபோல், அம்மன் வலம் வந்த தேரில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி சென்று ேநர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, பாலாற்றங் கரையில் நடந்த மாயான கொள்ளையில் பக்தர்கள், தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்களை அங்காளம்மனுக்கு படையலிட்டு, பூஜை செய்து கொள்ளையிட்டனர்.