மத்திகிரி அரசு பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

ஓசூர், பிப்.28: ஓசூர் ரோட்டரி சங்கம் சார்பில், மத்திகிரி மேல்நிலைப்பள்ளியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பி.ஆர்.வாசுதேவன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சின்னப்பன் வரவேற்றார். ₹5 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்காக கட்டப்பட்ட நவீன கழிப்பிடத்தை ரோட்டரி ஆளுநர் நிர்மல் பிரகாஷ் திறந்து வைத்தார். ஓசூர் ரோட்டரி சங்கத்தலைவர் ஆனந்தகுமார், முன்னாள் ஆளுநர் தர்மேஷ் பட்டேல், துணை ஆளுநர் அரிகிருஷ்ணன், செயலாளர் வெங்கடேஷ்  இயக்குநர் ராகவன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் தாட்சாயிணி, சீனிவாசலு, கார்த்திகேயன், மஞ்சுநாத், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: