சேலம் காரிப்பட்டியில் 2 பிரபல ரவுடிகள் குண்டாசில் கைது

சேலம், பிப்.27:  சேலம் காரிப்பட்டியில் 2 பிரபல ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் சிறை வைத்துள்ளனர். சேலத்தை அடுத்துள்ள கூட்டாத்துப்பட்டி நேருகாலனியை சேர்ந்தவர் ரமேஷ் (எ) அரைப்பல் ரமேஷ் (40), பிரபல ரவுடி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டாளியான அதேப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தண்டபாணி (29) என்பவருடன் காரிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான ரவுடிகள் ரமேஷ், தண்டபாணி ஆகிய இருவரையும் சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதில், ரவுடி ரமேஷ் மீது 4 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகளும், ரவுடி தண்டபாணி மீது 3 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு உள்பட 8 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, மாவட்ட எஸ்பி தீபா கனிகர் மூலம் கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்ற கலெக்டர், பிரபல ரவுடிகளான ரமேஷ், தண்டபாணி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் போலீசார் வழங்கினர். 

Related Stories: