ஜெ.பி. கல்லூரி பட்டமளிப்பு விழா

தென்காசி, பிப். 22:  ஆய்க்குடி ஜெ.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 9வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி நிர்வாகி அலங்காரம் தலைமை வகித்தார். முதல்வர் தனராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் சுருளியாண்டி கலந்து கொண்டு 14 துறைகளை சேர்ந்த 363 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார்.

விழாவில் டிஎப்டி கல்விக்குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் ஞானசெல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். பல்கலைக்கழக தர வரிசையில் முதலிடம் பெற்ற மாணவிகள் தாரணி, ஆதிரா மற்றும் பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற 13 மாணவ, மாணவியரை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: