வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் அபேஸ்

புளியங்குடி, பிப். 22: சேர்ந்தமரம்  அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் அபேஸ் செய்யப்பட்டது.

சேர்ந்தமரம் அருகே கடம்பன்குளம் கரடிகுளம் ரோட்டை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்.  இவரது மனைவி சந்திரா(39). சம்பவத்தன்று இரவு சந்திரா கணவருடன் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர் சந்திரா  கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினான். நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து ேசர்ந்தமரம் எஸ்ஐ  செல்வின் ஐசக் ஞானதாஸ் விசாரித்து வருகிறார்.

Related Stories: