×

தேர்தலை முன்னிட்டு ஒத்திகை - குமரியில் அதிரடிப்படை அணிவகுப்பு

நாகர்கோவில், பிப்.22: குமரியில் தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த அதிவேக அதிரடிப் படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தல் வரும் முன்பு மத்திய பாதுகாப்பு படைப்பிரிவை சேர்ந்த அதிவேக அதிரடிப் படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவது வழக்கம். பிரச்னை ஏற்படும் பகுதிகள், கலவர வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும். விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்றுமுன் தினம் குமரிக்கு அதிவேக அதிரடிப்படையை சேர்ந்த 60 வீரர்கள் வருகை தந்தனர். நேற்று காலை கோட்டாறு காவல் நிலைய பகுதிகளிலும், மாலையில் பூதப்பாண்டி காவல் நிலைய பகுதிகளிலும் அணிவகுப்பு ஒத்திகையை நடத்தினர்.
குமரியில் உள்ள 4 சப் டிவிசன்களிலும், தலா ஒரு நாள் காலை மற்றும் மாலையில் இந்த அணிவகுப்பு நடைபெறும்.

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...