ஓசூரில் பாமக பிரமுகர் இல்ல திருமணம்

ஓசூர், பிப்.21:  ஓசூரில் பாமக முன்னாள் மாவட்ட தலைவர் இல்ல திருமண விழா இன்று(21ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, நகரம் முழுவதும் அலங்கார வளைவுகள், கட்சி கொடிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் விடுத்துள்ள அறிக்கை:

ஓசூரிலிருந்து கொத்தூர் செல்லும் சாலையில், சூடப்பா திருமண மண்டபத்தில் எனது மூத்த மகன் கணேஷ்குமாருக்கு, நிகிதாவுடன் திருமணம் நடக்கிறது. விழாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். அன்புமணி ராமதாஸ் எம்பி, பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். விழாவில் மாநில துணை தலைவர் பாடி செல்வம் வரவேற்க உள்ளார். மேலும், நகரம், ஒன்றியம், மாவட்ட பாமக நிர்வாகிகள், பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர். இந்த திருமண விழாவில் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: