நெல்லை மாநகராட்சியில் வறுமைக் கோட்டுக் கீழ் 30 ஆயிரம் பேர் உள்ளனர் கண்காணிப்பு அலுவலர் ஆய்வில் தகவல்

நெல்லை, பிப். 20: நெல்லை மாவட்டத்தில் சிறப்பு நிதியுதவி திட்டப் பதிவேற்றப் பணிகள் நடந்து வருவதை தமிழ்நாடு சிறப்பு நிதியுதவி திட்ட கண்காணிப்பு அலுவலர் கிரண்குரல்லா ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள நபர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நெல்லை மாநகராட்சி பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் தகுதியான நபர்களா என்பதை கள ஆய்வு மேற்கொண்டு, அதனை பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாநகராட்சியில் 55 ேபர்களுக்கு மேல் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்தியோதயா அன்னயோஜானா திட்டத்தில் உள்ளவர்களின் பெயர்களை இந்த திட்டத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எப்எக்எஸ் பொறியியல் கல்லூரி மற்றும் சங்கர்நகர் பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் இந்த பதிவேற்றப் பணிகளை தமிழக சிறப்பு நிதியுதவி திட்ட கண்காணிப்பு அலுவலர் கிரண் குரல்லா கலெக்டர் ஷில்பா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில், பணிகள் முறையாக, வேகமாக நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என கிரண் குரல்லா தெரிவித்தார்.

நெல்லை சப் கலெக்டர் டாக்டர் மணீஷ் நாராணவரே, மாநகராட்சி கமிஷனர் நாராயணநாயர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின்அபுபக்கர், மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: