நெல்லை, பிப். 20: நெல்லை மாவட்டத்தில் சிறப்பு நிதியுதவி திட்டப் பதிவேற்றப் பணிகள் நடந்து வருவதை தமிழ்நாடு சிறப்பு நிதியுதவி திட்ட கண்காணிப்பு அலுவலர் கிரண்குரல்லா ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள நபர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நெல்லை மாநகராட்சி பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் தகுதியான நபர்களா என்பதை கள ஆய்வு மேற்கொண்டு, அதனை பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாநகராட்சியில் 55 ேபர்களுக்கு மேல் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்தியோதயா அன்னயோஜானா திட்டத்தில் உள்ளவர்களின் பெயர்களை இந்த திட்டத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.