கார், பைக் எரிந்து நாசம்

பெரம்பூர்: பெரவள்ளூரில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் பைக் எரிந்து நாசமானது. பெரம்பூர் அடுத்த பெரவள்ளூர் பெரியார் நகர் 8வது தெருவை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (55). இவர், நேற்று முன்தினம் இரவு தனது காரை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் இவரது கார் திடீரென  தீப்பற்றி எரிந்தது. அருகில் நிறுத்தி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜகோபாலன் (57) என்பவரின் பைக்கும் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெரம்பூர் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார்,  பைக் முற்றிலும் எரிந்து எலும்புகூடானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரவள்ளூர் போலீசார் திடீர் தீவிபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.  நள்ளிரவு கார், பைக் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: