அண்ணாநகர்: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் பழங்களை ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படுவதாக கிடைத்த தகவலில் பேரில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 3 டன் சப்போட்டா பழம் மற்றும் 9 கிலோ ரசாயன கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு கோயம்பேடு பழ மார்க்கெட்டில் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், பழங்களை விரைவாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக கோயம்பேடு பழ மார்க்கெட்டில் வியாபாரிகள் ரசாயன கற்களை வைத்து, பழங்களை பழுக்க வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.