ஊத்தங்கரையில் திமுக கிராம சபை கூட்டம்

ஊத்தங்கரை, பிப்.15:  ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டையில், திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் திருவிடைமருதூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சேட்டு வரவேற்றார்.  இதில் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி,  தொண்டரணி துணை அமைப்பாளர் முரளி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக்குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பெருமாள், நகர இளைஞரணி வினோத்குமார், வேடி, ஜாவித், மகளிரணி கெளவுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை தேவைகள் சரிவர செய்து தரப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். தொடர்ந்து ஊத்த ங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் பொது மக்கள் மனுஅளிக்கலாம் என திமுக நிர்வாகிகள் தெரிவி த்தனர்.

Related Stories: