×

வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ₹1 லட்சம் சிக்கியது

குலசேகரம், பிப். 15:  வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத ₹1 லட்சத்தை கைப்பற்றினர்.வேர்கிளம்பி பேரூராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிக்கான டென்டர் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஒப்பந்ததாரர்களிடம் பேரம் பேசப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று மாலை விஜிலென்ஸ் டிஎஸ்பி மதியழகன் தலைமையில் விஜிலென்ஸ் போலீசார் மற்றும் தக்கலை வட்டாச்சியர் ராஜாசிங் ஆகியோர் திடீரென வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது செயல் அலுவலரின் அறையில் இருந்த மேஜையில் கணக்கில் வராத பணம் ₹1 லட்சம் இருந்துள்ளது. இதனை கைப்பற்றிய போலீசார் இந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் செயல் அலுவலர் மாலதி மற்றும் ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு துவங்கிய சோதனை மற்றும் விசாரணை இரவு நீண்ட நேரமாகியும் ெதாடர்ந்து நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ₹1 லட்சம் கைப்பற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : panchayat office ,
× RELATED கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய...