×

கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் பழனி நாடார் எம்எல்ஏ திறந்துவைத்தார்

பாவூர்சத்திரம், மார்ச் 15: கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை பழனி நாடார் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். கீழப்பாவூர் யூனியன், கீழ வெள்ளகால் ஊராட்சி மன்றத்திற்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் துவரங்காட்டில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தின் திறப்பு விழா யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் பூமாரியப்பன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பழனி நாடார் எம்எல்ஏ, புதிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஊராட்சி தலைவர்கள் ராஜ்குமார், பாண்டியன், அரசு ஒப்பந்தகாரர் குமார், தர்மராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சி துணைத்தலைவர் அமுதா நன்றி கூறினார்.

The post கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் பழனி நாடார் எம்எல்ஏ திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Palani Nadar MLA ,Lower Vellakal Panchayat Office ,Bhavoorchatram ,Kee Vellakal Panchayat Office ,Keezhappavur Union ,Keeza Vellakal Panchayat ,Duvarangad ,Keeza Vellakal Panchayat Office ,Dinakaran ,
× RELATED பைக்குகளில் மதுபானம் கடத்திய 4 பேர் கைது