ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், பிக்கிலியில் நடந்தது. கிளை செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கிளை தலைவர் சின்னசாமி வரவேற்றார். கவுரவ தலைவர் அரங்கநாதன் சங்க கொடி ஏற்றினார். மாநில துணை செயலாளர் செல்வராஜ், மாநில துணை தலைவர் முனுசாமி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் பிக்கிலி, பெரியூர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு இயற்கை மரண நிதியுதவி ₹5லட்சம், விபத்து இழப்பீடு ₹10 லட்சம் வழங்க வேண்டும். கட்டட தொழிலாளி குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் அரசே வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும், விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் நலத்திட்ட உதவிகளை  வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.

Related Stories: