விருதுநகரில் பட்டாசு மூலப்பொருளை கிலோ கணக்கில் பதுக்கி

விருதுநகர், பிப். 13: விருதுநகரில் பட்டாசு மூலப்பொருளை கிலோ கணக்கில் பதுக்கி வைத்திருந்தவை, போலீசார் கைது செய்தனர். விருதுநகர் பாவாலி காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர், தனது வீட்டின் அருகே, காலியிடத்தில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரிப்பிற்கான மருந்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி ஆமத்தூர் எஸ்ஐ கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில், செல்வம் வீட்டின் காலியிடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசு வெடிகள் தயாரிப்பிற்கான பொருட்கள் இருந்தன. இது தொடர்பாக செல்வத்தை கைது செய்த ஆமத்தூர் போலீசார், 12 கிலோ மெஸ் அலாய், 7 கிலோ சோடியம் ஆக்ஸிலைட், 4 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், 10 கிலோ தூக்கு மணி, 38 அவுட் பந்து, ஆயிரம் மெஷின் பீஸ் திரிகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: