சாத்தூரில் ஆய்வுக்கூடம் இல்லாத அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் அவதி

சாத்தூர், பிப். 13: சாத்தூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், ஆய்வுக் கூடம் மற்றும் சத்துணவு திட்டம் நடைமுறைப்படுத்தாததால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.சாத்தூர் மேலகாந்தி நகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, பெரியார் நகரில் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ளன. இங்கு ஆய்வுக் கூடம் இல்லை. சத்துணவு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், இங்கு படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு வழங்காததால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கின்றனர். எனவே, சாத்தூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கூடம்,  சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவதுடன், அங்கு சமையலறை மற்றும் சத்துணவுக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்போதே, ஆய்வுக்கூடம் மற்றும் சமையலறை உள்ளதா என சம்பந்தபட்ட துறையை சார்ந்த பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும்.ஆனால், அவர்கள் செய்யவில்லை. இதனால், மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கலெக்டர் தலையிட்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கூடம், சமையலறை அமைத்து சத்துணவு திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

Related Stories: