ஓசூர் நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளி ஆண்டு விழா சினிமா நடிகர்கள் ஆரி, சதீஷ் பங்கேற்பு

கிருஷ்ணகிரி, பிப்.6:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் 8ம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளி நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன் தலைமை வகித்தார். தாளாளர் சாமுண்டீஸ்வரிகொங்கரசன், நிர்வாக இயக்குநர்கள் வக்கீல் கவுதமன், டாக்டர்.புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஆர்வலரும், நடிகருமான ஆரி பங்கேற்று கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்தார். நடிகர் சதீஷ், பள்ளி கலையரங்கினை திறந்து வைத்தார்.  குணம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் விஜிசென்னகேசவன் மற்றும் அகடாமி நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்று, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர். பின்னர் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது, பிளாஸ்டிக்கால் ஏற்படும் விளைவுகள், பெருகி வரும் நகரமயமாக்குதலால் உருவாகும் பாதிக்கப்படும் விலங்குகளின் அவலநிலை ஆகியவற்றை விளக்கி விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியும், விவசாயிகளின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: