மானூர், உக்கிரன்கோட்டை பள்ளியில் குடியரசு தினவிழா

நெல்லை, பிப். 2:  மானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ஸ்டாலின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்தார். கல்வி சிறந்து விளங்கிய மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியை குமாரி பிரபா, குடியரசு தின உரையாற்றினார். விழாவில் இடம்பெற்ற மாணவ, மாணவிகளின் ஒயிலாட்டம், உடற்பயிற்சி நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. தாமஸ் அந்தோணி ரவிக்குமார் நன்றி கூறினார்.இதேபோல் உக்கிரன்கோட்டை பேதுரு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா நடந்தது. தாளாளர் பீட்டர் ஜான் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எட்வின் மைக்கேல் தாஸ், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Related Stories: