செங்கோட்டை அருகே மயானத்தில் திரண்டு கிராம மக்கள் போராட்டம்

செங்கோட்டை, பிப். 1:  செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை ஊர்சாவடி கீழத்தெருவை சேர்ந்த கோட்டியப்பன் மனைவி படைவீட்டாள் (90). இவர், உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார். இவரது உடலை புதைப்பதற்கான பணிகள், ஊருக்கு பொதுவான சுடுகாட்டில் நடந்தது.

அப்போது அங்கு வந்த ஒருவர், இந்த சுடுகாடு தனக்கு சொந்தமான இடம் என்றும், அதற்குரிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இங்கு உடலை புதைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதையறிந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மயானத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சுடுகாடு, 4 சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்டது. கடந்த நான்கைந்து தலைமுறையாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என முறையிட்டனர்.தகவலறிந்த செங்கோட்டை சமூக நலப்பாதுகாப்பு திட்ட தாசில்தார் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கிராம மக்கள், மூதாட்டி உடலுக்கு இறுதிசடங்கு நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: