ஆலங்குளம், பிப். 1: ஆலங்குளம் அருகே இலவச சைக்கிள் வழங்கக் கோரி மாணவர்கள், பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம் அருகே நல்லூரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இப்பள்ளியில் பிளஸ்1 முடித்து இந்தாண்டு பிளஸ்2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் தகுதியுடைய சிலருக்கும், அரசுதவி பெறாத வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து நேற்று சைக்கிள் கிடைக்காத மாணவர்கள், இலவச சைக்கிள் வழங்கக் கோரி பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.