அருப்புக்கோட்டை, ஜன. 31: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் அருப்புக்கோட்டையில் தாலுகா அலுவலகம் நேற்று வெறிச்சோடியது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறது. தினமும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பினர். ஆனால், அரசு அலுவலர்கள் பணிக்கு திரும்பவில்லை. அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அலுவலர்கள் நேற்று பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடியது.