தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தேர் நிலையை அடைந்தது

தாரமங்கலம், ஜன.24: தாரமங்கலத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த கைலாசநாதர் கோயில் தைப்பூசத் தேரோட்டம், 3ம் நாளான நேற்று, நிலையை அடைந்தது. முதல் நாள் அண்ணாசாலை வரையும், 2ம் நாள் பஸ் ஸ்டாண்டிலும், 3ம் நாளில் காலையில் புறப்பட்டு அண்ணா திடலில் நிறுத்தப்பட்டு, மாலையில் தேர் நிலையை அடைந்தது. முன்னதாக சிவன் பார்வதி வேடமணிந்த பக்தர்களின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இளைஞர்களின் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Related Stories: