சென்னை, ஜன.23: மீஞ்சூர் அருகே வீட்டில் இருந்து ஒரு மாதத்திற்கு முன் மாயமான பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு பெரிய கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி செல்லம்மாள் (60). இவர் கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி ஆடு மேய்ப்பதற்காக சென்றார். ஆனால், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் கோபாலின் மகன் செல்வம் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின்படி, போலீசார் காணாமல் போன செல்லமாவை தேடிவந்தனர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று தேவதானம் ஏரியில் பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.