சென்னை, ஜன.23: பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 50 டன் பிளாஸ்டிக் பொருட்களை தனியார் சிமென்ட் நிறுவனத்திடம் சென்னை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது.ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதை கண்காணிக்க வார்டு மற்றும் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் கடந்த 20 நாட்களாக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம் மற்றும் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்.இதன்படி கடந்த மாதம் 31ம் தேதி முதல் 18ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 67.72 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டும், மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளது.