கொத்தடிமைகள் 9 பேர் மீட்பு

சென்னை, ஜன. 23: உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தில் செயல்படும் தனியார் அரிசி ஆலையில், உத்திரமேரூர் தாசில்தார் அகிலாதேவி நேற்று திடீர் சோதனை நடத்தினார்.  அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி கிராமத்தை சேர்ந்த வாசு (34), அவரது மனைவி அமுலு (30), மகள் பார்வதி (12), மகன் அர்ஜுனன் (6) மற்றும் இன்னொரு குடும்பத்தை சேர்ந்த விஜி (20), அவரது மனைவி மலர் (25) மகன் கார்த்திக் (8), மாசி (3), மகள் ராதிகா (6) ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவர்களை மீட்டனர்.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: