அரூர், ஜன.22: அரூர் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை இந்த கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 329 விவசாயிகள் 2,800க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.