தேன்கனிக்கோட்டை, ஜன.22: தேன்கனிக்கோட்டை அருகே மர்ம ஆசாமிகள் தீ வைத்ததில் ₹50 ஆயிரம் மதிப்பிலான ராகி போர் எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜெ.காருப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(42). விவசாயியான இவர், தன்னுடைய நிலத்தில் விளைந்த ராகி பயிரை அறுவடை செய்து கிராமத்திற்கு அருகே உள்ள பாறை மீது குவித்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற மர்ம ஆசாமிகள், ராகி போருக்கு தீவைத்தனர்.