சென்னை: அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் 11 வயது சிறுமி ஒருவரை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த லிப்ட் ஆபரேட்டர், வாட்டர் மேன், வாட்ச் மேன் உள்ளிட்ட பலர் பல மாதங்களாக மயக்க மருந்து உள்ளிட்ட போதைப் மருந்துகளை கொடுத்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டதாக 60 வயது முதியவர் உள்பட 17 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ேமலும் கடந்த வாரம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி, மாஜிஸ்திரேட், டாக்டர்கள் உள்ளிட்ட 81 சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் கடந்த வாரம் அனுப்பப்பட்டது.